Skip to content
Home » வயநாடு…… ராகுல்…. ஆனி ராஜா இன்று வேட்புமனு தாக்கல்

வயநாடு…… ராகுல்…. ஆனி ராஜா இன்று வேட்புமனு தாக்கல்

  • by Senthil

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. கேரளாவில் ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது. நாளை (ஏப்ரல் 4) மனு தாக்கல் செய்ய கடைசி நாகடைசி நாள் ஆகும். இந்த நிலையில்,  கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் காந்தி  இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தொண்டர்களுடன் வாகன பேரணியாக சென்ற,ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, அவரது சகோதரி பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்டோர் அவருடன் இருந்தனர்.

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை  எதிர்த்து போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட்  வேட்பாளர்  ஆனி ராஜாவும் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.  கடந்த 2019 தேர்தலில், ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!