தெற்கு ரெயில்வேயில் எலக்ட்ரீசன்,பிட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்காக தேர்வெழுதி,
பயிற்சிகள் முடிந்து ரயில்வேயில் பணிக்காக காத்திருக்கும் சுமார் 17 ஆயிரம் அப்பரண்டீஸ்களுக்கு தெற்கு ரயில்வே நிர்வாகம் பணி வழங்காததை கண்டித்து நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்காமல் புறக்கணிப்பதாக சுமார் 30க்கும் அதிகமான அப்ரண்டீஸ் மாணவர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர்.
ஏற்கனவே பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தங்களுக்கு பணி வழங்காமல் வேண்டுமென்றே அலட்சியப்
படுத்ததாகவும் – இந்திய ரயில்வேயின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து மண்டலங்களிலும் பணிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தெற்கு ரயில்வேயில் மட்டும் பணிகள் வழங்கப்படாமல் புறக்
கணிக்கப்படுகிறது என்பதனால் இதனை கண்டித்து மாவட்ட ஆட்சியர் இடத்தில் மனு அளித்ததோடு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை கொடுப்பதற்கு வந்திருந்தனர்