கடந்த வாரம் திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் மாநாடு நடைபெற்றது இதில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த நிர்வாகிகள் மாநாட்டில்
கலந்து கொண்டு பின்னர் வீடு திரும்பினார் அப்பொழுது சாலை விபத்தில் மூன்று நபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி பேருந்து நிறுத்தம் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் இறந்தவர்கள் படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.