Skip to content
Home » திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சி…… பிரபல ரவுடி …..மண்டைவெட்டி மாதவன் கொடூர கொலை

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி மண்டை வெட்டி மாதவன் (50), பிரபல ரவுடி.
இவர்  மீது திருச் சி மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

திருவானைக்காவல் சன்னதி வீதி நாலுகால் மண்டபம் அருகே  நேற்று  நள்ளிரவில் மர்ம நபர்கள் மண்டை வெட்டி மாதவனை கொடூரமாக வெட்டி  கொலை செய்துள்ளனர்.   தலை, கழுத்துப் பகுதியில்  சரமாரி வெட்டுக்காயங்கள் காணப்பட்டன.  இன்று காலை  மாதவன் பிணமாக கிடப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஸ்ரீரங்கம்  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து  சடலத்தை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்க அனுப்பி வைத்தனர்.

மாதவனை கொலை செய்தவர்கள் யார் என விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை நடந்த இடத்திற்கு கைரேகை  நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு நடத்தினர்.  மாதவனால் பாதிக்கப்பட்ட எதிர்கோஷ்டியினர் இந்த கொலையை நடத்தி இருக்கலாம் என்ற கோணத்தில்   போலீசார்  துப்பு துலக்கி வருகிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!