Skip to content
Home » திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சிக்கு ரூ.1000 கோடியில் புதிய திட்டங்கள் கொடுத்தது திமுக…. எடப்பாடிக்கு… அமைச்சர் நேரு பதில்

திருச்சி உறையூர்  8வது வார்டு லிங்க நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு , நியாயவிலை கடையை திறந்து வைத்ழ குத்துவிளக்கேற்றினார்.

இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில்  மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ், விஜயலட்சுமி கண்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் கண்ணன்மற்றும் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அமைச்சர் நேரு அளித்த பேட்டி:

திருச்சியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சிக்கு திமுக எதுவும் செய்யவில்லை கே என் நேரு சொல்வது பச்சை பொய் என கூறி கூறினாரே இதற்கான பதில் என்ன என்று  பத்திரிகையாளர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் நேரு,  நீங்களே இதற்கு பதில் சொல்லுங்கள், கடந்த 10 ஆண்டு காலத்தில் திருச்சி என்ன செய்தார்கள்.?டி.என்.பி.எல் எம்ஜிஆர் காலத்தில் துவங்கியது. ஜெயலலிதா முதலமைச்சரானபோது  2வது அலகு துவக்கினார். அதைத்தவிர  வேறு என்ன செய்தார்? திருச்சி மாநகரத்துக்கு அதிமுக என்ன செய்தது.

கலைஞரும், , தற்போது ஸ்டாலினும் திருச்சிக்கு  நிறைய செய்து இருக்கிறார்கள். கலைஞர் இருக்கும் பொழுது இன்ஜினியரிங் கல்லூரி வந்தது, புதிய மாவட்ட ஆட்சியர்  அலுவலகம், கோர்ட்டு, தொட்டிபாலம் கட்டப்பட்டது
தற்போது தளபதி காலத்தில் ஆயிரம் கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் புதிய பஸ் நிலையத்திற்கு 350 கோடி, புதிய மார்க்கெட்டிற்கு நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது மேலும் 600 கோடி ரூபாய் ஐடி பார்க்குக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் பாதாள சாக்கடை திட்டத்தை போட்டுவிட்டு போய்விட்டார்கள், ரோடு போடுவதற்கு பணம் தரவில்லை. பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு ரோடுகள் போடப்பட்டு வருகிறது.10 வருடம் ஆட்சியில் இருந்தவர்களை  விட கூடுதலாக நாங்கள் செய்திருக்கிறோம்.

திருச்சியை  பொருத்தவரை 65வார்டுகளிலும் குடி தண்ணீர், சாலை வசதி ஆகிய எல்லாவற்றையும் கிழக்கு, மேற்கு, ஸ்ரீரங்கம் தொகுதி என்று இல்லாமல் செய்து வருகிறேன். அனைத்து மக்களும் எங்களுக்கு ஆதரவு தந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!