திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (செப்.15) ஒரே நாளில் 61 ஆயிரத்து 361 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த நிலையில், உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 70 லட்சம் வசூலாகியுள்ளது. அன்றைய தினத்தில் 18 ஆயிரத்து 722 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளதுடன், 3 லட்சத்து 20 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், இலவச தரிசன பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
