Skip to content
Home » சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 12 நாளில் ரூ.1 கோடி காணிக்கை

  • by Senthil

தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலம் சமயபுரம் மாரியம்மன் கோயில்.  தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து  தினமும்  இங்கு பக்தர்கள் வந்து  அம்மனை திரிசிக்கிறார்கள்.

அவ்வாறு  வரும் பக்தர்கள் கோயில் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை  அவ்வப்போது  கோயில் அதிகாரிகள் உண்டியலை திறந்து எண்ணுவார்கள்.  அந்த வகையில் கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் உள்ளிட்டோர்  நேற்று காணிக்கைகளை எண்ணினர்.

அப்போது கோயில் உண்டியலில் கடந்த 12 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை எண்ணியதில் 1 கோடியே, 5 லட்சத்து,84 ஆயிரத்து,57 ரூபாய் ரொக்கமும்,2 கிலோ 244 கிராம் தங்கமும், 2 கிலோ 809 கிராம் வெள்ளியும், 209 அயல்நாட்டு நோட்டுகளும்,320 அயல்நாட்டு நாணயங்களும் கிடைக்கப் பெற்றன .

இந்த தகவலை   இணை ஆணையர் கல்யாணிதெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!