Skip to content
Home » சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

சாரதாஸ் டிரையல் ரூமில் கேமிராவா?.. 5 லட்சம் கேட்டு மிரட்டிய தம்பதி கைது…

  • by Senthil

திருச்சி என்எஸ்பி ரோட்டில் பிரபல துணிக்கடை சாரதாஸ் உள்ளது. இதன் உரிமையாளராக இருப்பவர் ரோசன் (35). இவர் கடந்த 14ம் தேதி கோட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது துணிக்கடையான சாரதாசில் உள்ள டிரையல் ரூமில் உடைகளை மாற்றிக்கொள்ளும் ரூமில் ரகசிய கேமராவை வைத்து பெண்கள் உடை மாற்றும் போது படம் பிடித்ததாகவும், அந்த வீடியோக்களை  திருச்சி சாரதாஸ் துணிக்கடையின் டிரையல் ரூமில் வைக்கப்பட்ட ரகசிய கேமராவில் பதிவான் காட்சிகள் என கூறி சமூக வலைதளங்களில் அப்லோடு

Photos of Trichy Sarathas, Triplicane, Chennai | August 2023

செய்யாமல் இருக்க 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என தஞ்சையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (59), ராதிகா (48) ஆகியோர் மிரட்டுவதாக மனு அளித்திருந்தார்.  இதன் அடிப்படையில் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட தம்பதியினரை கைது செய்து விசாரணை நடத்தினர்.  அதில் சம்மந்தப்பட்ட தம்பதியினர்  பணத்திற்காக பொய்யாக கூறியதாக  விளக்கம் அளித்தனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் மற்றும் ராதிகா தம்பதியினரை கைது செய்து போலீசார்  சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!