Skip to content
Home » பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் போக்சோவில் கைது….

மயிலாடுதுறை மாவட்டம் தேரிழந்தூர் கம்பர் அரசு பள்ளியில் வேதியியல் ஆசிரியராக
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுக்கா கண்ணாரக்குடி கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மகன் ஐயப்பன் (வயது 35). கடந்த 6மாதமாக தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.குத்தாலம் கடைவீதியில் டியூஷன் சென்ட்டர் நடத்திவருகிறார். இவர் திருமணம் ஆகாதாவர். இவர், கடந்த டிசம்பர் மாதம் 31ஆம்தேதி கம்பர் மேனிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி ஒருவரை குத்தாலம் கடைவீதியில் தான் பாடம் எடுக்கும் தனியார் டியூஷன் சென்டருக்கு இரவு 8 மணிக்கு யாரும் இல்லாத நேரத்தில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும் அந்த மாணவியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோல் தொடர்ந்து மாணவியை பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கியுள்ளார். இதனால் வீட்டில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் போல மாணவி இருந்துள்ளார். இதில் சந்தேகப்பட்ட பெற்றோர், மாணவியிடம் என்ன நடந்தது என்று விசாரித்ததில் அப்போது அந்த மாணவி, தன்னிடம் ஆசிரியர் அய்யப்பன் தகாத முறையில் நடந்து கொண்டதை தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் மாணவியை அழைத்துச்சென்று மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாகவல்லி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டு போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து ஆசிரியர் ஐய்யப்பனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நாகை சிறையிலடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!