2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கோடை வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பள்ளிகள் திறக்கப்படுமா?
இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘இதுவரை அப்படி எந்த முடிவையும் கல்வித்துறை எடுக்கவில்லை. அதுபற்றி முடிவு எடுப்பதற்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகளிடம் அமைச்சர் ஆலோசனை நடத்துவார். அதன்பின்பு அவர் முதல்-அமைச்சருடன் கலந்தாலோசிப்பார். அதற்கு பிறகுதான் பள்ளிகள் திறப்பு தாமதம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்’ என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இது தொடர்பாக பேசுகிறார். எனவே பள்ளிகள் திறப்பும் தள்ளிப்போகலாம். இதுபற்றித்தான் அமைச்சர் முதல்வரிடம் பேச இருப்பதாக கூறப்படுகிறது. எனவே புதன்கிழமைக்கு பதிலாக வரும் 12ம் தேதி(திங்கள்) பள்ளிகள் திறக்கப்படலாம் என தெரிகிறது. இன்று பிற்பகலில் இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும்.