Skip to content
Home » சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை… 2 முதியவருக்கு ஆயுள் தண்டனை..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மேலகாவிரி பகுதியை சேர்ந்தவர்கள் செல்வம் (65), முருகன் (60). இவர்கள் இருவரும் அப்பகுதியை சேர்ந்த 8 மற்றும் 9 வயது இரண்டு சிறுமிக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து, காவிரி ஆற்று பகுதிக்கு அழைத்து சென்று தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளனர்.

கடந்த மார்ச் 16ம் தேதி சிறுமிகள் இருவரும் ஆற்று பகுதிகளில் இருந்து இரவு வந்துள்ளனர். இதையடுத்து சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமிகளிடம் ஏன் இந்த நேரத்தில் இங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிகள் இருவருக்கும், முருகன், செல்வம் பாலியல் தொல்லை அளித்தது தெரிந்தது.

இதையடுத்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கும்பகோணம் மகளிர் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து, கடந்த மார்ச,17ம் தேதி செல்வம், முருகன் இருவரையும் கைது சிறையில் அடைத்தனர். இதுகுறித்த வழக்கு தஞ்சாவூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர்ராஜன், முதியவர்கள் செல்வம்,முருகன் இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா ரூ.4லட்சம் அரசு தரப்பில் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!