Skip to content
Home » கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

கரூர் அருகே சாலையோரம் இளம்பெண் எரித்துக்கொலை….

  • by Senthil

கரூர் மாவட்டம் மணல்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் உடல் கருகிய நிலையில் 30- வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் முழுவதும் கருகிய நிலையில் கழுத்தில் தாலிக்கொடி மற்றும் இடது கால் விரலில் மெட்டி அணிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் சாலையோரம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொலையா? தற்கொலையா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!