திருச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு நிலவியது. அதிகாலை முதல் காலை 9 மணி வரை பனிமூட்டம் கடுமையாக இருந்தது. குளிரும் வாட்டி எடுத்தது. இதன் காரணமாக காலையில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. அதே நேரத்தில் வாகனங்களில்
சென்றவர்கள் காலை 8 மணி வரை முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். டூவீலர்களில் சென்றவர்கள் காலை 9 மணி வரை சொட்டர் அணிந்து இருந்தனர். திருச்சி புறநகர் பகுதிகளில் முசிறி முதல் திருச்சி பைபாஸ் வரை காலை 8 மணி வரை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இது குறித்து வாத்தலை பகுதி விவசாயிகள் கூறும்போது இந்த பகுதியில் இப்போது மலர் சாகுபடி செய்துள்ளோம். கடுமையான பனி தொடர்ந்து நீடித்தால் மலர்கள் பூக்கும் தன்மை பாதிக்கப்படும் என்றனர்.