Skip to content
Home » மாணவர்கள் உயிரிழப்பு…. தலா ரூ. 2லட்சம் நிதியுதவி… முதல்வர் ஸ்டாலின்..

மாணவர்கள் உயிரிழப்பு…. தலா ரூ. 2லட்சம் நிதியுதவி… முதல்வர் ஸ்டாலின்..

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை சென்ற அரசு பேருந்து மீது அதன் பின்னால் வந்த லாரி வேகமாக மோதியது. இந்த விபத்தின் போது பேருந்தின் படிக்கட்டில் பயணித்த நான்கு கல்லூரி மாணவர்களில் 3 பேர்  சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த மாணவர் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக காவல் துறையினர்  தெரிவித்தனர். விசாரணையில், உயிரிழந்த மாணவர்கள் மோனிஷ், கமலேஷ், தனுஷ் மற்றும் ரஞ்சித் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்த 4 மாணவர்களும், மதுராந்தகம் பகுதியில் உள்ள மாலோலன் கலைக்கல்லூரியில் படித்து  வந்தது தெரியவந்துள்ளது. இந்த 4 கல்லூரி மாணவர்களும் மோகல்பாடி, ராமாபுரம் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இந்த விபத்து எப்படி நடந்தது என போலீசார் விசாரித்து வருகின்றனர். படியில் பயணித்தால் நொடியில் மரணம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டும் அதை கண்டுகொள்ளாமல் மாணவர்கள் பயணித்ததால் இன்று அவர்கள் உயிருடன் இல்லை என்பதே பெற்றோரின் வேதனையாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்த 4 மாணவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும்  மாணவர்களின் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மனம் வேதனையடைந்தேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!