Skip to content
Home » தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

தொழிலில் நஷ்டம்… தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை….

திருச்சி கே.கே.நகர் ஓலையூர் ரோடு இச்சிக்காலம்பட்டி, பாரி நகர் விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன் (வயது 60). இவர் திருச்சியை அடுத்த நாகமங்கலம் பகுதியில் நிறுவனம் ஒன்று நடத்தி வந்தார். 16 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தை நடத்தி வந்த அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த புருஷோத்தமன் வீட்டில் யாரும் இல்லாத போது நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் தினேஷ்ரோஷன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!