தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட் குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.அதன் விவரம் வருமாறு:
முதல்வர் மு.க. ஸ்டாலின்: தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை நமது அரசின் கனவு; அது நாளை முதல் நனவாக வேண்டும் .பட்ஜெட் நிதியை மட்டுமன்றி சமூக நீதியை அடிப்படையாக கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ஈரமும், இதயமும் உள்ளது. அமைச்சர்களும், ஆட்சியர்களும், மாவட்ட நிர்வாகமும் திட்டங்களை மிகச் சிறப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ: தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறோம். இதற்கு மேல் இந்த நிதிநிலை அறிக்கையில் எதுவும் செய்ய முடியாது. தமிழ்நாடு இந்தியாவிற்கு பல துறைகளில் வழிகாட்டி வருகிறது .ஏற்றுமதியில் முதன்மையாக உள்ளது. பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு 65% நிதியை தமிழ்நாடு அரசு தான் கொடுக்கிறது என கூறினார்.