Skip to content
Home » பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

பித்தளை அண்டாவில் அமுக்கி … தஞ்சை மூதாட்டி கொலை …

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் , பண்டாரவாடை, கரை மேட்டுத் தெருவை, சேர்ந்தவர் சீனிவாசன் மனைவி செல்வமணி(55) . சீனிவாசன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த விட்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் திருமணமான 3 மகள்கள் உள்ளனர். ஒரு மகன் வெளிநாட்டிலும், மற்றொரு மகன் அதே பகுதியிலும் வசித்து வருகிறார்.

அதே பகுதியில் தனியாக வசித்து வரும் செல்வமணி, கடந்த 24ம் தேதி திருச்செந்துார் முருகன் கோவிலுக்கு செல்வதாக அக்கம் பக்கத்தில் கூறியுள்ளார். இந்நிலையில், செல்வமணியின் மகள் ராஜலட்சுமி,நேற்று மாலை வீட்டிற்குச் சென்ற சென்ற போது வீட்டின் கதவு பூட்டி இருந்தது. மேலும், வீட்டின் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியது. பின்னர்,அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, செல்வமணியை பித்தளை அண்டாவில் தலை கீழாக அமுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து தகவலறிந்த பாபநாசம் போலீசார், செல்வமணி உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!