Skip to content
Home » பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் ஆசிரியை எரித்து கொன்ற ஆசிரியர் சிறையில் அடைப்பு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த  தீபா என்ற ஆசிரியையை காணவில்லை என    அவரது கணவர் பாலமுருகன் கடந்த 15.11.2023–ம் தேதி வ.களத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து தீபாவை போலீசார் தேடி வந்தனர். அவர் பணிபுரிந்த வண்ணாரம்பூண்டி அரசு மேல்நிலை பள்ளியில் விசாரணை செய்த போது அவருடன் பணிபுரிந்த குரும்பலூர் கிராமத்தை சேர்ந்த  வெங்கடேசன் (37) என்ற ஆசிரியருடன் காணாமல் போன அன்று சென்றதாக தெரிய வந்தது.

அதன்பேரில் விசாரணையை முடுக்கி விட்ட காவல்துறையினர் தலைமைறைவாக இருந்த ஆசரியர் வெங்கடேசனை கண்டுபிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளா தேவி உத்தரவின்பேரில்  டிஎஸ்பி சீராளன் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்த நிலையில்  ஆசிரியர் வெங்கடேசனை சென்னையில்  போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கும்  தகவல்கள் கிடைத்தது ஆசிரியர் வெங்கடேசன் ஆசிரியை தீபாவை நயமாக பேசி ஏமாற்றி தீபாவின் காருடன் பெரம்பலூர் மாவட்டம் முருக்கன்குடி மற்றும் நமையூர் வனப்பகுதியில் வைத்து சுத்தியலால் அடித்து கொலை செய்துவிட்டு தீபாவின் உடலை தீபாவின் காரிலேயே ஏற்றிச்சென்று புதுக்கோட்டை அருகில் காட்டு பகுதியில் வைத்து பிரேதத்தை முழுவதுமாக எரித்துவிட்டதாகவும் ஆசிரியர் தீபா அணிந்திருந்த தங்க தாலிச்செயின் மற்றும் அவரது செல்போன் ATM –கார்டு உள்ளிட்ட உடைமைகளையும் தீபாவின் காருடன் எடுத்துச்சென்று மதுரை ,திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் சுற்றித்திரிந்துவிட்டு இறுதியில் கோயம்பத்தூர் உக்கடம் மார்க்கெட் பகுதியில் தீபாவின் காரை அங்கேயே விட்டுவிட்டு கேரளா மாநிலம் சென்றும் அதன்பின்னர் சென்னை சென்று தலைமறைவாக இருந்து வந்த்தாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருடன் இணைந்து மேற்படி பெண் ஆசிரியையின் உடலை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் வழக்கின் எதிரி ஆசிரியர் வெங்கடேசனை வ.களத்தூர் காவல்நிலைய குற்ற எண் 232/23 Women Missing @ 364,212,109,120(b) IPC @ 302,404,201,212,109, 120(B)IPC என்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆசிரியை தீபாவிடம், வெங்கடேசன் பல லட்சம் பணம் வாங்கி உள்ளார். அதை திருப்பி்க்கேட்டபோது ஏற்பட்ட மோதலில் இந்த கொலை நடந்ததாக தெரிகிறது. தீபாவின் உடல் எரிக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் போலீசார் தேடியபோது சில எலும்பு துண்டுகள் கிடைத்தது. அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!