திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு போலீஸ்காலனியில் இருந்து பொதுமக்கள் சார்பில் ஆண்டுதோறும் சமயபுரம்மாரியம்மன் மின்வழி அலங்காரத்துடன் வாணவேடிக்கையுடன்மேளதாளங்கள் முழங்க பூ எடுத்து செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக 21 ஆண்டாக நேற்று ஞான விநாயகர் கோவிலில் இருந்து சமயபுரம் மாரியம்மனுக்கு 4வது வார பூசொரிதல் விழாவை முன்னிட்டு மின் அலங்காரங்கள் வானவேடிக்கை மற்றும் மேளதாளங்கள் முழங்க சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு
பூ எடுத்துச் செல்லப்பட்டது. இந்த விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாரியம்மனுக்கு பூ கொடுத்து வழிபாடு செய்தனர். பின்னர் விழா கமிட்டி சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது.