Skip to content
Home » தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

தஞ்சை அருகே 2 புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை…

  • by Senthil

தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூரில் கடந்த 1970ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டது. இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஓட்டுக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இந்த பள்ளி காலப்போக்கில் பழுதடைந்தது. இதனால் பொதுமக்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து இப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டது.  தொடர்ந்து ரூ.32.60 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகளுடன் கூடிய கான்கிரீட் கட்டிடம் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. இதை முன்னாள் எம்எல்ஏ எம்.ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கு.செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!