Skip to content
Home » சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

சிங்கப்பூரில் உயிரிழந்த கணவர்… உடலை மீட்டு தர மனைவி கண்ணீர்..

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், மனோஜிப்பட்டியைச் சேர்ந்தவர் பேரரசி. தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த சசிகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆறு வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக சசிகுமார் சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.

கண்ணீருடன் பேரரசி

அப்போது அவரது அழைப்பை சிங்கப்பூர் நிறுவனத்தினர் துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மீண்டும் அழைத்து, சசிக்குமாரின் உடல் அழுகிய நிலையில் உள்ளதால் உடலை இந்தியாவிற்கு அனுப்ப இயலாது என அவர்கள் கூறியதாக தெரிகிறது.

இதனால் மேலும் அதிர்ச்சி அடைந்த பேரரசி, கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சிங்கப்பூரில் உயிரிழந்த தனது கணவரின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். தனது கணவர் பணியாற்றிய நிறுவனத்தில் அவரது உயிரிழப்பு குறித்து முறையான தகவல்களை தர மறுப்பதாக அப்போது அவர் கண்ணீருடன் முறையிட்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!