Skip to content
Home » தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

தஞ்சை ஜிஎச்-ல் அரசு டாக்டரின் அஜாக்கிரதையால் குழந்தை உயிரிழப்பு…?.. உறவினர் போராட்டம்.

  • by Senthil

தஞ்சாவூர் மாவட்டம், சூரக்கோட்டை அருகே மடிகை கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் கீதா. இவர்களுக்கு தரணிகா என்ற பத்து வயது குழந்தை உள்ளது. இவர்கள் அந்தப் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் அந்த குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தி சில மணி நேரத்திலே குழந்தையின் உடல் குளிர்ச்சி அடைந்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது எடுத்த அவர்கள் காசநாடு புதூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு உள்ள மருத்துவர்கள் குழந்தையை பரிசோதித்து நான்கு ஊசிகள் போட்டுள்ளனர். பின்பு அந்த ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அந்த குழந்தையை தனது சொந்த காரில் அழைத்து தஞ்சாவூர் ஆரம்ப அரசு சுகாதாரத்திற்கு வந்துள்ளார். மேலும் அவர் மருத்துவமனையில் செல்லும் பாதி வழியிலேயே திரும்பி காசநாடு புத்துருக்கு சென்றதாக கூறப்படுகிறது. குழந்தையின் உடல் உடல்நிலை மேலும் பாதிப்படைய தொடங்க நிலையில் மீண்டும் காசநாடு புத்தூரிலிருந்து தஞ்சாவூர் ராஜா மிராசர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் குழந்தைக்கு மேலும் 4 ஊசிகள் போட்டுள்ளனர். ஊசி செலுத்தி சிறிது நேரத்தில் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளது. இதை அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிரிழந்து உள்ளதாக மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த தஞ்சை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா மற்றும் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி உரியவர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் போராட்டம் கைவிடப்பட்டு மேற்கு போலீஸ் ஸ்டேசனில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!