Skip to content
Home » தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மூதாட்டியின் உடல் தானம்…

தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த அந்தோணியம்மாள் (81) காலமானார். இவரது விருப்பப்படி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடல் தானமாக வழங்கப்பட்டது. தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை மறியல் பகுதியை சேர்ந்த லூர்து சாமி என்பவரின் மனைவி அந்தோணி அம்மாள் (81). இவர் சமீபத்தில் வயது மூப்பு காரணமாக காலமானார். உயிருடன் இருந்தபோது அந்தோணி அம்மாள் தனது உடலை தானமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவரது விருப்பப்படி அவரது உடல் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. அவரது உடலை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அந்தோணி அம்மாளின் மகள்கள், மருமகன்கள் தானமாக அளித்தனர். தஞ்சாவூர் பிரின்ஸ் லயன்ஸ் சங்க தலைவர் மற்றும் முன்னாள் தலைவர்கள் உடனிருந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!