Skip to content
Home » மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

மழையால் வாழை இலைகள் தேக்கம்…. தஞ்சை விவிசாயிகள் வேதனை..

தஞ்சை மாவட்டம், திருவையாறு சுற்றுவட்டார பகுதியில் காவேரி படுகை, குடமுருட்டி படுகை, வெண்ணாற்று படுகை என படுகை பகுதியில் நெல்லுக்கு அடுத்தபடியாக விவசாயிகள் வாழையை அதிகப்படியாக பயிரிட்டு வருகிறார்கள். வாழை இலைக்காக மட்டும் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதியில் சுமார் 20,000 ஏக்கருக்கு மேலாக வாழை சாகுபடி செய்து உள்ளார்கள்.

கார்த்திகை மாதத்தில் மட்டும் வாழை இலை அதிக அளவில் விற்பனையாகும். வியாபாரிகள் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே விவசாயிகளிடம் முன் பதிவு செய்து கொள்வார்கள். ஒரு ஏடு நான்கு ரூபாய் வரையில் சென்ற வருடம் விற்றது. இந்த வருடம் தொடர்ந்து மழையின் காரணமாக வாழை இலை 10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஏடு இரண்டு ரூபாய்க்கு விற்பனை செய்தோம். வியாபாரிகள் வாங்கி சென்றார்கள். அதே விலைக்கு இந்த வருடம் விற்பனை ஆகிறது. கடுமையான வீழ்ச்சி அடைந்து உள்ளது.

இரண்டு ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். அவற்றில் கூட கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன் வராததனால் மூன்று நாட்களாக அறுக்கப்பட்ட இலைகள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது. சென்னை மதுரை போன்ற பெருநகரங்களுக்கு வியாபாரிகள் இலைகள் வாங்கிச் செல்வார்கள். தொடர்ந்து மழை பொழிவானது இருந்து வருவதனால் இலை விற்பனையானது கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர். தமிழக அரசு ஊக்கத்தொகையாக வாழை விவசாயிகளுக்கு வங்கி மூலமாக வட்டி இல்லாத கடன் வழங்கி உதவி செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!