Skip to content
Home » தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

தஞ்சை அருகே ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்த பறக்கும்படை…

தஞ்சை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர், நிலையான காணிப்பு குழுவினர் போலீசார் உதவியுடன் தீவிரவாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய ஆவணமின்றி ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு சென்றால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு தஞ்சை ஞானம் நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி உதயகுமார் தலைமையிலான குழுவினர் போலீசாருடன் இணைந்து வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவரை வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் ரூ. 1லட்சத்து 39 ஆயிரத்து 850 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை செய்தபோது, அவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பதும், நிறுவனத்திற்கு சொந்தமான ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 850 கொண்டு வந்ததும் தெரியவந்தது. இருப்பினும் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!