Skip to content
Home » தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து… ஒருவர் பலி…. 4பேர் படுகாயம்..

தஞ்சை அருகில் உள்ள வல்லம் பெரியார் நகரை சேர்ந்தவர் சையத் அபுதாஹிர் (வயது 55) இவரது மனைவி ஷாஜகான் பீவி (வயது 52) இவர்களது பேரன் உமர் ( 8) இவர்கள் 3 பேரும் நேற்று இரவு வல்லம் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது தஞ்சை களிமேடு பகுதியைச் சேர்ந்த ஹரிஹரன் ( 20) இவரது நண்பன் தமிழ்ச்செல்வன் (வயது 22) மற்றொரு மோட்டார் சைக்கிளில் எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தனர். அப்போது சையத் அபுதாகிர் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது திடீரென பயங்கரமாக மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக

சையத் அழதாகிர் உயிரிழந்தார். இவரது மனைவி ஷாஜகான் பீவி மற்றும் பேரன் உமர் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த தமிழ் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்திற்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!