Skip to content
Home » தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

தஞ்சை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் பலி….

தஞ்சை அருகே திருவையாறு மருவூர் பழைய தெருவை சேர்ந்த கலியராஜ் என்பவரின் மகன் முரளிதரன் (43). தனியார் மருந்து கம்பெனி ஊழியர். இவர் அலுவலக வேலையாக மன்னார்குடி சென்றுவிட்டு தனது பைக்கில் தஞ்சைக்கு திரும்பிக் கொண்டு இருந்தார்.

அப்போது வாண்டையார் இருப்பு பெட்ரோல் பங்க் அருகே இவரது பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அந்த இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முரளிதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முரளிதரன் மனைவி பிரியா கொடுத்த புகாரின் பேரில் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!