அரியலூர் மாவட்டம், திருமானூர் புதுத்தெருவை சேர்ந்த அன்பு (50) இவர் திருமானூரில் பழக்கடை வைத்துள்ளார். இவர் திருவையாறு மார்க்கெட் வந்து பழங்களை வாங்கிகொண்டு எடுத்து செல்வதற்காக திருமானூரில் உள்ள தன் மகன் தமிழரசன்(19) என்பவருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தமிழரசன் பைக்கில் புறப்பட்டு திருவையாறு வந்து கொண்டு இருந்தார்.
அப்போது கஸ்தூரிபாய் நகர் அருகே தஞ்சையிலிருந்து திருவையாறு வழியாக திருமானூர் சென்ற அரசு பேருந்து எதிர்பாரதவிதமாக பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தமிழரசன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தமிழரசன் தந்தை அன்பு திருவையாறு போலீசில் புகார் செய்தார். இதன் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்இன்ஸ்பெக்டர் வேலாயுதம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.