Skip to content
Home » திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருவெறும்பூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள்.. சிசிடிவி மூலம் விசாரணை..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூர் எம் ஐ டி கல்லூரி அருகே உள்ள ஆஞ்சநேயர் நகரை சேர்ந்தவர் ஆரோக்கியம்மாள்(80) இவர் குண்டூர் எம் ஐ டி கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்ற பொழுது பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் ஆரோக்கிய அம்மாள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றான். இச்சம்பவம் குறித்துஆரோக்கிய அம்மாள் நவல்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதேபோல் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல் நகரை சேர்ந்தவர் முத்து வெள்ளை இவரது மனைவி இந்திரா (58) இவர் அந்த பகுதியில் உள்ள மாவு அரைக்கும் மில்லிற்கு மாவு அரைப்பதற்காக நடந்து சென்ற பொழுது பின்னால் ஸ்கூட்டியில் வந்த மர்ம நபர் இந்திராவின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றார். இந்த சம்பவம் குறித்து இந்திரா திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. ஒரே நாளில் திருவெறும்பூர் பகுதியில் இரண்டு வழிப்பறி சம்பவங்கள் நடந்த உள்ளதால் திருவெறும்பூர் பகுதி பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த மர்ம நபரை தேடி வருகின்றர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!