தூத்துக்குடியில் மழை வௌ்ளப்பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி, அந்தோணியார்புரம் பகுதியில் ஆய்வு செய்தார்.பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பாதிப்புகள் குறித்து முதல்வரிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாமில் உள்ள மக்களுக்கு
நிவாரணப்பொருட்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, கீதா ஜீவன் , எம்பி கனிமொழி, ஆகியோர் உடனிருந்தனர்.