பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்களில் ஒரு பிரிவினர் வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதனால் தமிழ்நாட்டில் 50 சதவீத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் வேலை நிறுத்தம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும், வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிக்கவேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளையில், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை நாளைக்கு ஒத்திவைக்கும்படி கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தார்.