Skip to content
Home » திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

திருச்சி அருகே 1 லட்சம் மதிப்புள்ள போதை பொருள் பறிமுதல்… ஒருவர் கைது.

  • by Senthil

திருச்சி மாவட்டம் உதவி கண்காணிப்பாளரின் காவல் மைய எண்ணிருக்கு 9487464651-க்கு காட்டூர் பகுதியில் இருந்து போதைப்பொருட்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் அறிவழகன் மேற்பார்வையில் திருவெறும்பூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும்

காவலர்கள் சகிதம் ரோந்து பணி செய்து கொண்டிருந்த போது காட்டூர் பகுதியில் நின்று கொண்டிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது அவர் கையில் வைத்திருந்த பவுச்சை அந்த நபரின் அனுமதியுடன் திருவெறும்பூர் வட்டாட்சியர் அவர்களின் முன்னிலையில் சோதனை செய்த போது அதில் அரசால் தடைசெய்யப்பட்ட Methamphetamine போதை பொருள் சுமார் 12.86 கிராம் இருந்தது.

அந்த நபரை கைது செய்து விசாரணை செய்த போது திருநாவுக்கரசு(34) , 9/52, பூச்சக்காடு, மோரூர் மேற்கு, சங்ககிரி, சேலம் மாவட்டம் என்று தெரியவந்தது. அவர் வைத்திருந்த Methamphetamine மற்றும் sterile வாட்டர் சிரஞ்சிகள் எலக்ட்ரானிக் எடை மிஷின் ஆகியவற்றுடன் இரண்டு செல்போன்களையும் கைப்பற்றியும் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த போதை பொருளானது ரூ.1,02,880/-மதிப்புடையது என தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!