Skip to content
Home » திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

திருச்சி அருகே அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்..

  • by Senthil

திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் அருள்தரும் நறுங்குழல் நாயகி உடனுறை அருள்மிகு எறும்பீஸ்வரர் கோவிலில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வண்ணமலர்கள், வாழைமரங்கள், கரும்பு ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் நடராஜர், சிவகாம சுந்தரி, மாணிக்கவாசகருக்கு மஞ்சள், திராவியபொடி, அரிசி மாவு, பழ வகைகள், தேன், பன்னீர், பழச்சாறு, தயிர், இளநீர், சந்தனம், திருநீறு, பால், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து உற்சவர் நடராஜர். சிவகாம சுந்தரி, மற்றும் மாணிக்கவாசகருக்கு பல்வேறு மலர்கள் , பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் , சிவனடியார்கள் கலந்து கொண்டு தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சிவபெருமானை வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!