திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்க மாவட்ட செயலாளர் மணலிதாஸ் தலைமையில் திருச்சி இரயில்வே ஜங்சனில் விதிமுறைகளை மீறி அளவுக்கதிகமாக ஆட்டோக்களுக்கு கொடுத்த பாஸை ரத்து செய்யக் கோரியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தென்னக இரயில்வே கோட்ட மேலாளரிடம் பாதிக்கப்பட்ட ஆட்டோ
தொழிலாளர்களுடன் மனு அளிக்க ஊர்வலமாக வந்த போது போலீசார் அவர்களை தடுத்தபோது காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.