Skip to content
Home » திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி பெல் நிறுவன ஊழியரை திட்டிய சக ஊழியர் மீது வழக்குப்பதிவு….

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெல் நிறுவனம் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். அந்த நிறுவன குடியிருப்பான பெல் கைலாசபுரம் ஏ செக்டரை சேர்ந்தவர் சுரேஷ் இவர் திருமயம் பெல் நிறுவனத்தில் ஆர்டிசிஎன் ஆக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சித்ரா (32)இவரது வீட்டின் அருகே பாண்டி மணிகண்டன் (38) என்பவர் வசித்து வருகிறார் இவர் திருச்சி பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். பாண்டி மணிகண்டன் வீட்டில் உள்ள புளிய மரம் சுரேஷ் வீட்டின் பக்கம் வந்துள்ளது. அதனை வெட்ட சொல்லி பலமுறை கூறியுள்ளார். ஆனால் பாண்டி மணிகண்டன் வெட்டாதால் ரேவதியும் சுரேஷும் வெட்டியுள்ளனர். இது நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது.

இதனால் சுரேஷ் குடும்பத்திற்கும் பாண்டி மணிகண்டன் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பாண்டி மணிகண்டன் சித்ராவையும் சுரேஷையும் ஜாதி பெயரை சொல்லி திட்டியதோடு இவர்களது வீட்டு வாசலில் பாண்டி மணிகண்டன் மலம்கழித்ததாக கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக சித்தரா பெல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பெல் போலீசார் இச்சம்பவம் குறித்து வன் கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து பாண்டி மணிகண்டனை கைது செய்து திருச்சி 6வது நீதீமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!