Skip to content
Home » திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

திருச்சி கல்லூரி மாணவி கொலையில், சிறுவன் கைது

  • by Senthil

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா அய்யம்பாளையம் ஓமலூர் தெருவை சேர்ந்தவர் அழகு பாண்டியன் இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்தம்மாள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் ஜோகிதா (வயது 17) இவர் திருச்சி தென்னூர் பாரதி நகரில் உள்ள தனது அத்தை மகாலட்சுமி (வயது 40) என்பவரது வீட்டில் தங்கி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று  வீட்டில் தனியாக இருந்த ஜோகிதாவின் செல்போன் நீண்ட நேரமாக ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவரது அக்கா பவித்ரா வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது ஜோகிதா கழுத்து மற்றும் முதுகு பகுதியில் ஆயுதங்களால் குத்தப்பட்டு பலத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

உடனடியாக தில்லைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோகிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் குறித்து தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

முதற்கட்ட விசாரணையில் திருச்சியை சேர்ந்த லோகேஷ் ராஜா என்ற 17 வயது சிறுவன், ஜோகிதா இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் அக்கா, தம்பி உறவு முறை கொண்டவர்கள் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக இவரது  பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில்  ஜோகிதா லோகநாதனிடம் பேசுவதை  நிறுத்திவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் ராஜா சம்பவத்தன்று ஜோகிதா வீட்டுக்கு சென்று அவரை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கத்தியால் குத்தி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம்அவரை போலீசார் கைது செய்து  சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!