Skip to content
Home » திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

திருச்சியில் 2வது சிறப்பு நீதிமன்றம்….சென்னை ஐகோர்ட் நீதிபதி துவங்கி வைத்தார்…

  • by Senthil

மோட்டார் வழக்குகள் தொடர்பான தீர்ப்பாயத்திற்கான நீதிமன்றம் திருச்சியில் செயல்பட்டு வருகிறது – மேலும் இரண்டாவது சிறப்பு நீதிமன்றத்தை இன்று காலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல் குமார் துவக்கி வைத்தார். மோட்டார் வாகனங்கள் விபத்து ஏற்படும் போது அது சார்ந்த வழக்குகளில் தீர்ப்பு தாமதமாவதை

தடுக்கும் வகையில் விரைந்து தீர்ப்புகள் வழங்கப்பட ஏதுவாக இந்த 2வது நீதிமன்றம் செயல்பட உள்ளது. இந்நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி,திருச்சி முதன்மை நீதிபதி பாபு,தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ், திருச்சி மாவட்ட  கலெக்டர்  பிரதீப்குமார், திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்தியபிரியா, திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், மற்றும் திருச்சி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!