Skip to content
Home » திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

திருச்சி அருகே பெல் ஊழியர் வீட்டில் நகை திருடிய நபர் கைது…

  • by Senthil

திருச்சி திருவெறும்பூர் அருகே பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் பகுதியில் வசித்து வருபவர் துரைராஜ் வயது (37) இவர் பெல் நிறுவனத்தில் கோல் கெமிக்கல் டிபார்ட்மெண்டில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 21 ஆம் தேதி சொந்த ஊரான வாசுதேவநல்லூருக்கு குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

அப்போது அருகில் குடியிருப்பில் வசிக்கும் ரமேஷ் என்பவர் தனது வீட்டின் பின்பக்கம் துணி காய வைக்கும் போது அருகில் உள்ள துரைராஜ் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்தததை பார்த்து இது குறித்து அவர் பெல் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் அதன் அடிப்படையில் காவல்துறையினர் துரைராஜின் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தபொழுது பீரோவில் இருந்த ஐந்தரை பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த நிலையில் துரைராஜ் வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற துவாக்குடி வாழவந்தான் கோட்டை ரெட் நகரை சேர்ந்த சார்லஸ் வயது 36 என்ற நபரை பெல் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!