Skip to content
Home » திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

திருச்சி அருகே ஓடும் பஸ்சிலிருந்து தவறி விழுந்தவர் பலி…

  • by Senthil

கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுரக்குப்பம் வள்ளலார் நகரை சேர்ந்தவர் 50 வயதான சேகர் இவர் அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்தை திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வீரமங்கலம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 48 வயதான தேவன் ஓட்டிச் சென்றார்.திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேட்டை காலனி ராமர் கோவில் தெருவை சேர்ந்த 39 வயதான ரவிச்சந்திரன் நடத்துனராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் திருச்சி சென்னை தேசிய சாலையில் உள்ள நெடுகூர் பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்திலிருந்து எதிர்பாராதமாக சேகர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!