Skip to content
Home » திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி அருகே கார் மோதி பெண் பலி… 2 வாலிபர்கள் படுகாயம்..

திருச்சி கொண்டையம் பேட்டை சென்னை பைபாஸ் சாலையில் சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதி பெண் பலியானார் .இரண்டு வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சி மாவட்டம், மணச்சநல்லூரை சேர்ந்தவர் பகஸ்லின்
( 20). இவரது நண்பர் திருச்சி பாலக்கரையை சேர்ந்த விக்ரம் (வயது 20). கல்லூரி படிப்பை முடித்த இவர்கள் இருவரும் இரு சக்கர வாகனம் ஒன்றில் திருவானைக்காவல், கொண்டையம் பேட்டை என்ற இடத்தில் திருச்சி – சென்னை பைபாஸ் சாலையை குறுக்கே கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத கார் மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவ்வழியே நடந்து சென்ற ராஜேஸ்வரி ( 65) என்ற பெண் மீது அதே கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்து வடக்கு போக்குவரத்து புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!