Skip to content
Home » திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

திருச்சி அருகே குடிபோதையில் டூவிலரிலிருந்து கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து பலி…

  • by Senthil

திருச்சி அரியமங்கலம் அருகே உள்ள பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (29). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு ஆயில் மில்-மாஜி ராணுவ காலனி சாலையில் தனது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கணேசாபுரம் ஆர்ச் அருகே வந்தபோது நிலை தடுமாறி அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்துள்ளார். இதில் தலை மற்றும் உடல் பகுதிகளில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் இந்த தகவலை அரியமங்கலம் போலீசுக்கு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் மது போதையில் கழிவுநீர் வாய்க்காலில் விழுந்து இறந்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, நிக்கோலஸின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!