Skip to content
Home » திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் வாலிபர் கைது….

திருச்சி மாவட்டம்  மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம் மந்தியார் ஓடையைச் சேர்ந்தவர் 62 வயதான சந்திரா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூனாம்பாளையத்தில் உள்ள சட்டிக்கருப்பு கோவில் அருகே காட்டுப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய மண்ணச்சநல்லூர் போலீசார் சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். போலீசாரின் விசாரணையில் சந்திரா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது சம்பந்தமாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். போலீசாருக்கு கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் சந்தேகத்தின்பேரில் பூனாம்பாளையம் ஊர்க்காடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் 24 வயதான சுந்தர் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரனையில் அவர்தான் கொலை செய்தது தெரியவந்தது. போலீசாரிடம் சுந்தர் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சம்பவம் நடைப்பெற்ற அன்று அப்பகுதியில் மது அருந்தி கொண்டிருந்த சுந்தரை பார்த்த சந்திரா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சுந்தர் சந்திராவை கொலை செய்ததாக போலீசில் வாக்குமூலம் அளித்தார். இந்த சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் சந்தேக மரண வழக்கை கொலை வழக்காக சுந்தர் மீது பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் திருச்சி மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!