திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அடுத்த துவாக்குடியில் திருநெடுங்களநாதர் கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு உற்சவமூர்த்தியான நடராஜ பெருமாள், சிவகாமி சுந்தரி, மாணிக்கவாசகர் ஆகிய சுவாமிகளுக்கு பால்,சந்தனம், இளநீர் அபிஷேக பொடி, பழங்கள், பஞ்சாமிர்தம், திருநீர், அரிசி மாவு, தயிர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் சிறப்பு
அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மலர்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் சிவனடியார்கள், பக்தர்கள், தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடி நடராஜப் பெருமானை வழிபட்டனர்.