Skip to content
Home » திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி பட்டதாரி இளைஞர் பலி…

திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த சேகர் இவரது மகன் கார்த்திக் (22) இவர் பி.காம் பட்டதாரி ஆன இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால் தன்னுடைய நண்பர்கள் மூலம் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்துள்ளார் .

இந்நிலையில் இன்று வழக்கம்போல் தனது சக ஊழியர்களுடன் துறையூர் காட்டு அங்காயி கோவில் அருகே பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார் அப்போது இவர் பெயிண்ட் அடிக்கும் பணியில் இருந்த போது தலைக்கு மேல் சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராத விதமாக மோதியதில் அவர் மேல் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துறையூர் தீயணைப்புத் துறையினர் மின்சாரத்தை தடை படுத்தி அவரது உடலை கைப்பற்றி துறையூர் காவல்துறையிடம் ஒப்படைத்தனர் .

கார்த்திக்கின் உடலை உடற்கூறு ஆய்விற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

பட்டதாரி இளைஞர் மின்சார தாக்கி உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!