Skip to content
Home » திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

திருச்சி அருகே சாலை விபத்தில் வாலிபர் பலி… ஒருவர் படுகாயம்…

  • by Senthil

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே பணமங்கலத்தில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மோட்டார் பைக் பாலக்கட்டையில் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மற்றொருவர் படுகாயம் அடைந்தார். அரியலூர் மாவட்டம்,செந்துறை, கீழ மளிகை, பெரிய தெருவைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் 31 வயதான ரஞ்சித் குமார். இவர் கவி டெக்கரேஷன் செந்துறை என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் 47 வயதான மாறன். இவர்கள் இருவரும் மோட்டார் பைக்கில் செந்துறையிலிருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது பணமங்கலம் பகுதியில் உள்ள திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பால கட்டையில் மோட்டார் பைக் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ரஞ்சித் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்திருந்த மாறன் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாறனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த ரஞ்சித்குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!