Skip to content
Home » திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

திருச்சியில் படிப்பை தொடர முடியாமல் மாணவி தற்கொலை….

  • by Senthil

திருச்சி, லால்குடி அருகே உள்ள வாளாடியை சேர்ந்தவர் உமா. இவரது மகள் கொரோனா காலக்கட்டத்தில் 9ம்வகுப்பை பாதியிலேயே நிறுத்தியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவி படிப்பை தொடர  வேண்டும் என பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த அந்த மாணவி கடந்த 1ம்தேதி எலிபேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சமயபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!