Skip to content
Home » காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

காரில் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வு பேரணி… திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்..

  • by Senthil

திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையம் மேலசிந்தாமணி இந்திராகாந்தி கல்லூரி மைதானத்தில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு இன்று (15.02.2024) விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய சாலை பாதுகாப்பு விதிமுறைகளை வலியுறுத்தும் வகையிலும் வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், வட்டார போக்குவரத்து அலுவலர் குமார், காவல் உதவி ஆணையர் (போக்குவரத்து) ஜோசப்நிக்சன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அருண்குமார், முகமது மீரா, பிரபாகர், செந்தில் சுப்ரமணியம், சத்யா, ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், வாகன விற்பனையாளர்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!