Skip to content
Home » திருச்சி அருகே ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம்… வளையல் அலங்காரம்..

திருச்சி அருகே ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம்… வளையல் அலங்காரம்..

திருச்சி மாவட்டம் சீராப்தோப்பில் ஸ்ரீ லலிதாம்பிகை கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆடி மாத பூஜையானது வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஆடிபூரம் மற்றும் ஆடிவெள்ளியை முன்னிட்டு இன்று ஸ்ரீ லலிதாம்பிகைக்கு பால் சந்தனம் மஞ்சள் இளநீர் திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வளையல்கள் மற்றும்

மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபாடு செய்தனர். பின்னர் இரவு பள்ளியறை புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!