Skip to content
Home » முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

முசிறி அருகே தா.பேட்டை போலீஸ் ஸ்டேசனில் டிஜஜி சரவண சுந்தர் ஆய்வு…..

  • by Senthil

திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் சரவணசுந்தர் முசிறி அருகே உள்ள தா.பேட்டை காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் போலீசார் கனிவாக நடந்து கொள்வதும், அவர்கள் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணவும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் அறிவுரைகள் வழங்கினார்.

காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்ப்பு மையத்தின் பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டு வைத்தார்.முசிறி உட்கோட்ட காவல் டிஎஸ்பி யாஸ்மின், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பலரும் உடன் இருந்தனர். தா.பேட்டை காவல் நிலையத்தில் அமைந்துள்ள வரவேற்பு மையத்தில் பதிவேடுகளை டிஐஜி சரவணா சுந்தர் பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!