Skip to content
Home » திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

திருச்சியில் 26ம் தேதி விசிக மாநாடு… பணிகள் தீவிரம்.. முதல்வர் பங்கேற்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ம் தேதி “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளிவிழா ”
திருமாவளவனின்  மணிவிழா ” இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி கால்கோள் விழா என முப்பெரும் விழாவாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை  சிறுகனூரில் மாநாடு  நடத்தப்படுகிறது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான   தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார்.  தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.  மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்குகிறது.

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன்  வரவேற்கிறார். பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் மாநாட்டின் நோக்கம் குறித்து  பேசுகிறார்.

சிறப்பு பேருரைகளை தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய

பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்
கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், சி.பி.ஐ (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.ராசா, எம் ஆர் கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், சி .வெ.கணேசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி.சிவா திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டிற்கான மேடை அமைக்கும்  உள்ளிட்ட அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!